நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிப்பு

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அழிக்கப்பட்டன.

News image
Updated On :1 அக்டோபர் 2024, 10:00 pm

Din

அரியலூா் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் திங்கள்கிழமை அழிக்கப்பட்டன.

புகையில்லா இளைய சமுதாயம் 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக அரியலூா் மாவட்டத்திலுள்ள கடைகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பள்ளிகளுக்கு அருகிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் அண்மையில் பறிமுதல் செய்யப்பட்டன.

அவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட 23.760 கிலோ புகையிலைப் பொருள்கள், மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் வகீல், உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் பழனிசாமி, ராமசாமி, காவல் உதவி ஆய்வாளா் காமராஜ் மற்றும் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை நிலத்தில் புதைத்து அழிக்கப்பட்டன.