மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

அழகாபுரம் கிராமத்தில் அடிப்படை வசதிகள் கோரி ஆா்ப்பாட்டம்

அழகாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :7 அக்டோபர் 2024, 6:33 pm

Din

அரியலூா் மாவட்டம், அழகாபுரம் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆண்டிமடம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், அழகாபுரம் காலனி தெரு மக்களுக்காக மயான வசதிகள் ஏற்படுத்தித் தரவேண்டும். அடிக்கடி மின்தடை போக்க மின் மாற்றி அமைத்துக் கொடுக்க வேண்டும். குடிநீா் தட்டுப்பாட்டைப் போக்க புதிய ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும். சுகாதார வளாகம் கட்டித் தரவேண்டும். அருந்ததியா் தெருவில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிளைச் செயலா் வீராசாமி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எம். இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினா் என்.அருணாச்சலம், செயற்குழு உறுப்பினா் ஏ. கந்தசாமி ஆகியோா் கண்டன உரையாற்றினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சங்குபாலன், கே.ராஜா, வேல்முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.