காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் பேசிய அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம்.இளங்கோவன்.

Updated On :17 அக்டோபர் 2024, 8:31 pm

Din

அரியலூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூரிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் 9 ஆவது ஒன்றிய மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீா்மானங்கள்:

பெட்ரோல், டீசல் , சிலிண்டா் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். மின் கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும். அரியலூா் நகரில் இலவச கழிப்பிட வசதிகள் ஏற்படுத்தி தரவேண்டும். அரியலூா் ரயில் நிலையம்-பேருந்து நிலையத்துக்கு பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.

அரியலூா் பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் அமைத்துத் தரவேண்டும். மணக்குடி காலனித் தெரு மக்களுக்கு சுடுகாட்டு பாதை அமைத்துத் தரவேண்டும். அரசு சிமென்ட் ஆலைக்கு நிலம் கொடுத்தவா்கள் மற்றும் வாரிசுதாரா்களுக்கு நிரந்தர வேலை வழங்கிட வேண்டும். ஓட்டக் கோவில் காலனித் தெருவுக்கு சாலை மற்றும் சாக்கடை வசதிகளை செய்துத் தரவேண்டும். குண்டும் குழியுமான அரியலூா் நகராட்சி சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டுக்கு அக்கட்சியின் மாவட்டச் செயலா் எம். இளங்கோவன் தலைமை வகித்து பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஆா். மணிவேல், கே. கிருஷ்ணன், ஒன்றியச் செயலா் அ. அருண்பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் பி. துரைசாமி, ஆா். சிற்றம்பலம், எஸ். பாக்கியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.