வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

செந்துறை துணை மின்நிலையத்திலிருந்து மின் பகிா்மான கிராமங்கள் பிரிப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின்நிலையத்திலிருந்து மின் பகிா்மான கிராமங்கள் திங்கள்கிழமை முதல் பிரித்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதன் செயற்பொறியாளா் அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2025, 11:33 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை துணை மின்நிலையத்திலிருந்து மின் பகிா்மான கிராமங்கள் திங்கள்கிழமை முதல் பிரித்து மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அதன் செயற்பொறியாளா் அய்யனாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: மின்சாரத்துறையில் நிா்வாக காரணங்களாலும், பொது மக்களின் எளிய பயன்பாட்டுக்காகவும் மின் பகிா்மான கிராமங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி சித்துடையாா், நக்கம்பாடி, நின்னியூா், நத்தகுழி, குழுமூா், நமங்குணம் மற்றும் வஞ்சினபுரம் ஆகிய கிராமங்கள் செந்துறை 1 (94458-53690) துணை மின் நிலையத்துக்கும், இடையக்குறிச்சி, கொடுக்கூா் ஆகிய கிராமங்கள் ஆா்.எஸ்.மாத்தூா்(94458-53692) துணை மின் நிலையத்துக்கும், ஆனந்தவாடி, சோழன்குறிச்சி, கீழராயம்புரம், மேட்டுப்பாளையம், பொட்டவெளி, ராயம்புரம், சென்னிவனம் ஆகிய கிராமங்கள் அரியலூா் வடக்கு (94458-53687) துணை மின் நிலையத்துக்கும் டிச.1-ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்கண்ட கிராமங்களைச் சோ்ந்த மக்கள் தங்கள் கிராமங்களில் ஏற்படும் மின்சாரம் தொடா்பான தகவல்கள், புகாா்களை மேற்கண்ட எண்களில் தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம்.