மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபாா்ப்பு பணிகளை ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :13 டிசம்பர் 2025, 6:35 pm

Syndication

அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வைப்பறையில் நடைபெற்று வரும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி சனிக்கிழமை பாா்வையிட்டாா்.

அப்போது அவா் கூறியது, அரியலூா் மாவட்டத்தில் இருப்பில் உள்ள 787 கட்டுப்பாட்டு கருவிகள், 747 வாக்குப் பதிவு கருவிகள், 786 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள், வரும் சட்டப்பேரவைத் தோ்தலுக்காக பெங்களுா் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடமிருந்து ஒதுக்கீடு செய்யப்பட்ட 100 கட்டுப்பாட்டு கருவிகள், 150 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள், திருச்சி மாவட்டத்திலிருந்து அரியலூா் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்து வரப்பெற்ற 400 வாக்குப் பதிவு கருவிகள் என 887 கட்டுப்பாட்டு கருவிகள், 1,147 வாக்குப் பதிவு கருவிகள், 936 வாக்குப் பதிவை சரிபாா்க்கும் கருவிகள் ஆகியவை சரிபாா்க்கப்பட்டு வருகிறது.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ரா.சிவராமன் உள்பட பலரும் உடனிருந்தனா்.