வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சுண்ணாம்பு கல் சுரங்க விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான உஞ்சினி சுண்ணாம்புக் கல் கன்கா் குவாரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், செந்துறையிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அவா்களின் கருத்துகளை பதிவு செய்து, அவற்றை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.