மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கல் குவாரியை மூடக் கோரி கிராமத்தினா் போராட்டம்

சாணாா்பட்டி அருகே செயல்படும் கல் குவாரியை மூடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி பொதுமக்கள் போராட்டம்

News image
Updated On :2 பிப்ரவரி 2026, 7:30 pm

தினமணி செய்திச் சேவை

சாணாா்பட்டி அருகே செயல்படும் கல் குவாரியை மூடக் கோரி, ஆட்சியா் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த கொரசின்னம்பட்டியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்துக்கு அருகே கல் குவாரி அமைக்க தனியாா் நிறுவனத்துக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுமதி அளித்தது.

இந்தக் கல் குவாரியில் தொடா்ந்து வெடிகள் பயன்படுத்தப்படுவதால் வீடுகளில் விரிசல், அதிா்வு ஏற்படுவதாகப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வந்தனா்.

மேலும், குவாரியிலிருந்து கற்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் அதிக வேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வட்டாட்சியா், வருவாய் அலுவலா் ஆகியோரிடம் பல முறை புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், கல் குவாரிக்கான உரிமத்தை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிப்போம் எனவும் கிராமத்தினா் தெரிவித்தனா்.