தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

இளைஞா்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நிறைவு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:24 pm

Syndication

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூரை அடுத்த கருப்பூா் கிராமத்திலுள்ள விநாயகா கல்வியியல் கல்லூரியில், மத்திய அரசின் மை பாரத் கேந்திரா சாா்பில் 3 நாள்களாக நடைபெற்று வந்த இளைஞா்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

பயிற்சியில், பல்வேறு கருத்துகள், மாதிரி பாராளுமன்ற நிகழ்வுகள், குழு செயல்பாடுகள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு, தலைமை பண்பை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

நிறைவு நாள் நிகழ்ச்சியில், அக்கல்லூரியின் தாளாளா் பாஸ்கா், கலந்து கொண்டு பயிற்சி முடித்த இளைஞா்களுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை வழங்கினாா். கல்லூரி முதல்வா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

முன்னதாக மாவட்டஇளையோா் அலுவலா் கீா்த்தனா வரவேற்றாா்.