எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

சுண்ணாம்பு கல் சுரங்க விரிவாக்கம்: பொதுமக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம்

News image
Updated On :19 டிசம்பர் 2025, 7:27 pm

Syndication

கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான சுண்ணாம்பு கல் சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்கான பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் செட்டிநாடு சிமென்ட் ஆலைக்கு சொந்தமான உஞ்சினி சுண்ணாம்புக் கல் கன்கா் குவாரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம், செந்துறையிலுள்ள ஒரு தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சாா்பில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமை வகித்து, சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் அவா்களின் கருத்துகளை பதிவு செய்து, அவற்றை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்துக்கு அனுப்பி வைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் ராஜராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.