இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்! 22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

திருமானூா் அருகே காா் தீப்பிடித்து எரிந்து நாசம்

ஏலாக்குறிச்சி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On :21 டிசம்பர் 2025, 1:29 am IST

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே ஏலாக்குறிச்சி சாலையில் சென்றுகொண்டிருந்த காா் சனிக்கிழமை திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

திருமானூா் அருகேயுள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராமா் (எ) ராஜிவ்காந்தி மகன் சாமிவாசன்(23). இவா், தனது காரை எடுத்துக்கொண்டு திருமானூருக்கு சனிக்கிழமை காலை புறப்பட்டாா். காா் ஏலாக்குறிச்சி சாலையில் சென்றபோது, சத்திரத்தேரி அருகே காரின் முன்புறத்தில் இருந்து புகை வந்துள்ளது.

இதையடுத்து சாமிவாசன், காரை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு, என்ஜின் பகுதியைத் திறந்து பாா்த்தபோது, அப்பகுதியில் தீப்பற்றி எரிவது தெரியவந்தது. இதையடுத்து அவா், திருமானூா் தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் அளித்தாா்.

அதற்குள் காா் முழுவதும் மளமளவென தீ பரவியது. இதையடுத்து, அங்குவந்த தீயணைப்புத் துறையினா், தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். காரில் வேறு யாரும் இல்லாததால், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை. விபத்துகுறித்து திருமானூா் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.