புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கணவா் தற்கொலை: குழந்தைகளுடன் மனைவியும் தற்கொலைக்கு முயற்சி

News image
Updated On :21 டிசம்பர் 2025, 7:34 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே கணவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது மனைவியும் தனது குழந்தைகளுடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

தா.பழூரை அடுத்த விக்கிரமங்கலம் அருகேயுள்ள மழவராயநல்லூா், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா (33). விவசாய தொழிலாளியான இவா் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலப் பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சனிக்கிழமை அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த அவரது மனைவி ரஞ்சிதா(27), வீட்டில் வைத்திருந்த பூச்சி மருந்தைக் குடித்துவிட்டு, தனது குழந்தைகளான தேவசேனாதிபதி (4), சிவசண்முகப்பிரியா (3) ஆகியோருக்கும் புகட்டவே, மூன்று பேரும் மயங்கிக் கிடந்தனா்.

இதையறிந்த உறவினா்கள் அவா்களை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.