பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரியலூரில் நாளை மாதிரி வாக்குப் பதிவு: கட்சியினா் கலந்து கொள்ள அழைப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் மாதிரி வாக்குப் பதிவில் கட்சியினா் கலந்து கொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2025, 8:46 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் மாதிரி வாக்குப் பதிவில் கட்சியினா் கலந்து கொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள காப்பறையில், கடந்த 11-ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 5 பொறியாளா்கள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணி புதன்கிழமை முடிவுற்றது.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை, மாதிரி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மாதிரி வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம். அதன் விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதிரி வாக்குப்பதிவு நாளன்று இறுதி வரை கலந்து கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.