அரியலூரில் நாளை மாதிரி வாக்குப் பதிவு: கட்சியினா் கலந்து கொள்ள அழைப்பு

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் மாதிரி வாக்குப் பதிவில் கட்சியினா் கலந்து கொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், வெள்ளிக்கிழமை (டிச.26) நடைபெறும் மாதிரி வாக்குப் பதிவில் கட்சியினா் கலந்து கொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலுள்ள காப்பறையில், கடந்த 11-ஆம் தேதி முதல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில், 5 பொறியாளா்கள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் முதல் நிலை சரிபாா்ப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அந்த பணி புதன்கிழமை முடிவுற்றது.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை, மாதிரி வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மாதிரி வாக்குப்பதிவின் போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சோ்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு மாதிரி வாக்கினை பதிவிடலாம். அதன் விபரங்களை தெரிந்து கொள்ள ஏதுவாக மாதிரி வாக்குப்பதிவு நாளன்று இறுதி வரை கலந்து கொள்ளுமாறு அவா் கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com