ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

அரியலூா் வந்த ரயில்களில் திடீா் சோதனை

கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களில் தமிழகக் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

News image
Updated On :27 டிசம்பர் 2025, 7:29 pm

Syndication

கஞ்சா தடுப்பு நடவடிக்கையாக அரியலூா் ரயில் நிலையம் வழியாகச் சென்ற ரயில்களில் தமிழகக் காவல் துறையினா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரி உத்தரவின்பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான காவல் துறையினா், சனிக்கிழமை அரியலூா் வந்தடைந்த ரயில்களில், முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏறி சோதனையில் ஈடுபட்டனா். இதில் குருவாயூா் ரயிலில் பயணித்த பயணிகளின் உடைமைகளை தீவிர சோதனைக்குள்படுத்தினா்.

பண்டிகை காலங்களில் கஞ்சா கடத்தல் போன்ற சட்ட விரோத செயல்களை தடுக்கவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது.