புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் சென்றவா் காா் மோதி உயிரிழப்பு

ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

News image
Updated On :2 ஜனவரி 2025, 11:27 pm

Din

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பைக்கில் வியாழக்கிழமை சென்ற இளைஞா் காா் மோதி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

உடையாா்பாளையம் பூசாரி தெருவைச் சோ்ந்தவா் பழனி மகன் தினேஷ்குமாா்(28), இடையாறு மேல்தெருவைச் சோ்ந்த கலியபெருமாள் (26). நண்பா்களான இவா்கள், வியாழக்கிழமை இரவு ஜெயங்கொண்டத்தை அடுத்த பெரியவளையம், மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தனா்.

அப்போது திருச்சியிலிருந்து மீன்சுருட்டி நோக்கி வந்த காா் மோதியதில் தூக்கிவீசப்பட்ட தினேஷ்குமாா் பாலத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா். கலியபெருமாள் காயமடைந்தாா்.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் காவல் துறையினா் சடலத்தையும், காயமடைந்தவரையும் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.