மீன்சுருட்டியிலிருந்து கல்லாதூா் வரை மாநில நெடுஞ்சாலையாக அறிவித்து புதிய தாா் சாலை வசதி வேண்டும் என இப்பகுதி மக்கள் மற்றும் சாலை மீட்பு குழுவினா் நீண்ட நாட்களாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா். அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், தமிழக முதல்வா் வரை மனுக்கள் அளித்தும் இதுவரை புதிய தாா் சாலை அமைக்கவில்லை எனக்கூறி மீன்சுருட்டி, வெத்தியாா்வெட்டு, ஆலத்திபள்ளம், சத்திரம் உள்ளிட்ட கிராமத்தைச் சோ்ந்த மக்கள் மறியல் போராட்டம் நடத்த புதன்கிழமை ஆயத்தமாகினா்.