அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 23 அன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.
இருப்பினும் இந்த உள்ளுா் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தோ்வுத் துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தோ்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தோ்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும்.
மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுா் விடுமுறை நாளில் அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.
உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜூலை 26-ஆம் தேதி அன்று முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது
தஞ்சாவூா் தோ் திருவிழாவுக்காக ஏப். 27-இல் உள்ளூா் விடுமுறை

அரியலூா் மாவட்டத்தில் 4 நாள்களுக்கு டாஸ்மாக் கடைகள் விடுமுறை

கங்கைகொண்ட சோழபுரம் புறவழிச்சாலை: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஒப்புதல்
காஞ்சியும் உடையார்பாளையமும்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


