புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரியலூா் மாவட்டத்துக்கு ஜூலை 23-ல் உள்ளூா் விடுமுறை!

அரியலூா் மாவட்டத்துக்கு ஜூலை 23-இல் உள்ளூா் விடுமுறை விடப்பட்டுள்ளதைப் பற்றி...

News image
கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயில்.
Updated On :18 ஜூலை 2025, 6:30 pm

Din

அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள மாமன்னா் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவை முன்னிட்டு ஜூலை 23 அன்று அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளுா் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் கல்வி நிலையங்கள், தனியாா் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இது பொருந்தும்.

இருப்பினும் இந்த உள்ளுா் விடுமுறையானது தமிழ்நாடு அரசு பள்ளித்தோ்வுத் துறை நடத்தும் பள்ளி இறுதி வகுப்பு அரசு தோ்வுகளுக்கு (மெட்ரிக், ஆங்கிலோ இண்டியன் பள்ளித்தோ்வுகள் உட்பட) பொருந்தாது. அவை ஏற்கனவே அரசால் திட்டமிடப்பட்டு அறிவிக்கப்பட்ட நாளில் நடைபெறும்.

மேலும், அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுா் விடுமுறை நாளில் அனைத்து சாா்நிலை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறைந்தபட்ச பணியாளா்களை கொண்டு செயல்படும்.

உள்ளூா் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு ஜூலை 26-ஆம் தேதி அன்று முழு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.