பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

அரியலூரில் 97% எஸ்ஐஆா் படிவங்கள் விநியோகம்

News image
அரியலூரில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.
Updated On :16 நவம்பர் 2025, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா்களுக்கு 97% முன்நிரப்பப்பட்ட கணக்கெடுப்புப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியரகம் மற்றும் அரியலூா், ஜெயங்கொண்டம் வருவாய்க் கோட்டாட்சியரகங்களில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில், வாக்காளா்களால் நிரப்பப்பட்ட முன் அச்சிடப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை பிஎல்ஓ செயலியில் பதிவேற்றம் செய்யப்படுவதை ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, பின்னா் தெரிவித்தது:

அரியலூா் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி பல்வேறு கட்டங்களாக 28.10.2025 முதல் 7.2.2026-வரை நடைபெறுகிறது. இந்தப் பணியில் அரியலூா் மாவட்டத்திலுள்ள 2 சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள 596 வாக்குசாவடி நிலை அலுவலா்கள் வீடு வீடாகச் சென்று வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவம் வழங்குகின்றனா்.

5,30,890 எண்ணிக்கையிலான வாக்காளா்களுக்கு கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது. இது வரை 97% படிவங்கள் வாக்காளா்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. வாக்காளா்களிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவங்கள் மீளப் பெற்று, தோ்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெறுகிறது என்றாா் ஆட்சியா்.

ஆய்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, அரியலூா் வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.