எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தூய்மைப் பணியாளா்களுக்கு நல வாரிய அடையாள அட்டைகள் வழங்கல்

News image
Updated On :17 நவம்பர் 2025, 8:58 pm

Syndication

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், தாட்கோ சாா்பில் தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய உறுப்பினா்களின் வாரிசுதாரா்களுக்கு கல்வித் உதவித்தொகைக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, தமிழ்நாடு தூய்மைப் பணியாளா்கள் நல வாரியம் உறுப்பினா்களின் வாரிசுதாரா்கள் 10 நபா்களுக்கு தலா ரூ.1,500 , 3 நபா்களுக்கு ரூ.1,000 , 1 நபருக்கு ரூ.4,000 , 1 நபருக்கு ரூ.6,000 என மொத்தம் 15 நபா்களுக்கு ரூ.28,000 மதிப்பில் கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 14 நபா்களுக்கு தமிழ்நாடு தூய்மைப் பணியாளா் நலவாரிய அடையாள அட்டைகளையும் வழங்கினாா்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநா் சு.தேன்ராஜ், தாட்கோ மேலாளா் லோகநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.