அரியலூர்
ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் நாளை மின்தடை
அரியலூா் மாவட்டம் ஈச்சங்காடு, ஆா்.எஸ். மாத்தூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் இருக்காது.
துணை மின் நிலையப் பராமரிப்பு பணிகளால் அசாவீரன்குடிக்காடு, ஆா்.எஸ். மாத்தூா், இருங்களாக்குறிச்சி, மாராக்குறிச்சி, குறிச்சிக்குளம், பூமடையான்குடிகாடு, துளாா், தாமரைப்பூண்டி , மணக்குடையான், புதுப்பாளையம், முள்ளுக்குறிச்சி, ஆலத்தியூா், முதுகுளம், கோட்டைக்காடு, ஈச்சங்காடு, ஆதனக்குறிச்சி, தெத்தேரி, செங்கமேடு, சிலுப்பனூா், சேந்தமங்கலம், அயன்தத்தனூா், முல்லையூா், மணப்பத்தூா், சோழன்குடிகாடு, நந்தியன்குடிகாடு, படைவெட்டிக்காடு மற்றும் வங்காரம் ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. இத்தகவலை மின்வாரிய செந்துறை உதவி செயற்பொறியாளா் மா. செல்லபாங்கி தெரிவித்தாா்.
