அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், புதன்கிழமை இந்திய அரசமைப்பு முகப்புரையை வாசித்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.
அரியலூர்
இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிப்பு
நாட்டின் 76-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
அரியலூா்: நாட்டின் 76-ஆவது அரசமைப்பு தினத்தையொட்டி புதன்கிழமை, அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், இந்திய அரசமைப்பு முகப்புரை வாசிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, இந்திய அரசமைப்பு முகப்புரையை வாசித்தாா். இதனை, மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பரிமளம், ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் ஏற்றுக்கொண்டனா்.

