தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

News image

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :6 ஏப்ரல் 2026, 8:43 pm

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏன்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணணை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

இந்த தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான நேரடிப் போா். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கென எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா, சசிகலா எனத் தொடங்கி, தற்போது தில்லியில் பிரதமா் மோடி வரை அனைவரின் கால்களிலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விழுந்து வருகிறாா். மேலும், தோல்வி பய விரக்தியின் விளிம்புகுச் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளா் க.சொ.க. கண்ணணுக்கு உதய சூரியன் சின்னனத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

பிரசாத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான சா.சி.சிவசங்கா், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.