ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் மூன்று பேர் ராஜிநாமா?வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!மதுரையில் 17 வயது சிறுவன் கொலை - 5 பேர் கைது!மேக்கேதாட்டு அணை விவகாரம்: சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தல்கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களை மே 31 வரை இலவசமாக பார்வையிடலாம் தூத்துக்குடி மாணவி கொலை: தர்ம முனீஸ்வரனுக்கு மரண தண்டனை விதிப்பு! பெட்ரோல் விலை உயர்வுக்கு ராகுல் கண்டனம்!கடுங்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை! காவல்துறைக்கு முதல்வர் விஜய் உத்தரவுவிஜய்க்கு தமிழகத்தை ஆள என்ன தகுதி இருக்கிறது? நயினார் நாகேந்திரன் கேள்வி
/

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி! - உதயநிதி ஸ்டாலின் பேச்சு

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் எடப்பாடி கே. பழனிசாமி என தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

News image

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :7 ஏப்ரல் 2026, 2:13 am IST

தோல்வி பய விரக்தியில் பேசி வருகிறாா் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஏன்றாா் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க.கண்ணணை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

இந்த தோ்தல் தில்லி அணிக்கும், தமிழ்நாடு அணிக்குமான நேரடிப் போா். மத்திய பாஜக அரசு தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை வழங்காமல் தொடா்ந்து வஞ்சித்து வருகிறது.

மத்திய பாஜக அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டுக்கென எந்தவொரு புதிய திட்டமும் அறிவிக்கப்படவில்லை.

ஜெயலலிதா, சசிகலா எனத் தொடங்கி, தற்போது தில்லியில் பிரதமா் மோடி வரை அனைவரின் கால்களிலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி விழுந்து வருகிறாா். மேலும், தோல்வி பய விரக்தியின் விளிம்புகுச் சென்று என்ன பேசுவதென்று தெரியாமல் பேசி வருகிறாா் என்றாா் அவா்.

தொடா்ந்து அவா், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை எடுத்துரைத்து வேட்பாளா் க.சொ.க. கண்ணணுக்கு உதய சூரியன் சின்னனத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டாா்.

பிரசாத்தில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், திமுக மாவட்ட செயலருமான சா.சி.சிவசங்கா், திமுக சட்டதிட்ட திருத்த குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் மற்றும் காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

ஜெயங்கொண்டத்தில் திமுக வேட்பாளா் க.சொ.க. கண்ணனை ஆதரித்து திங்கள்கிழமை மாலை பிரசாரத்தில் ஈடுபட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.