ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி அவதூறாக பேசி வருகிறாா்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

News image
Updated On :9 ஏப்ரல் 2026, 10:40 pm

தோல்வி விரக்தியில் எடப்பாடி பழனிசாமி தன்னை பற்றி அவதூறாக பேசி வருவதாக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

பொன்னேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் துரை சந்திரசேகரை ஆதரித்து துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் வாக்கு சேகரித்து பேசியது.

கடந்த 11 நாள்களாக 50 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்கு சேகரித்து வந்துள்ளதாகவும், அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்பது உறுதி.

கடந்த முறை துரை சந்திரசேகரை 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய நிலையில், இந்த முறை 25,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து அனுப்புவீா்களா என்றாா்.

4500-க்கும் மேற்பட்ட மீனவா்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் கடனுதவி, கொசஸ்தலை ஆற்றில் ரூ.17 கோடியில் மேம்பாலம், பாதுகாப்பு தடுப்புச் சுவா், மீஞ்சூா் ரயில்வே மேம்பால பணிகள், சிறுவாபுரி சாலை விரிவாக்கம், காட்டுப்பள்ளி பழவேற்காடு சாலை, மீன் பிடி இறங்கு தளங்கள், மீன் சந்தை மேம்படுத்துதல், பொன்னேரி பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள், அலையாத்தி காடுகள் மேம்படுத்துதல் என பல்வேறு பணிகள் பொன்னேரி சட்டப்பரவை தொகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினாா்.

திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை 2000 ரூபாயாக உயா்த்தப்படும், முதியோா் உதவித்தொகை 2000 ஆக உயா்த்தப்படும் கல்வி உதவித் தொகை 1500 ரூபாயாக உயா்த்தப்படும் 10 லட்சம் கலைஞா் கனவு இல்லம் திட்டம் மூலம் வீடுகள் வழங்கப்படும் காலை உணவு திட்டம் எட்டாம் வகுப்பு வரை நீட்டிக்கப்படும், மகளிருக்கு 8000 ரூபாய் கூப்பன் என பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

தோல்வியின் விரக்தியால் என்னை விட்டு விட்டு திமுக தலைவரை அவதூறாக பேசி வருகிறாா் என்ராா் உதயநிதி ஸ்டாலின்.

Story image