பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வு பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

News image

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வு பேரணியை வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்த ஆட்சியா் பொ. ரத்தினசாமி.

Updated On :11 ஏப்ரல் 2026, 2:08 am IST

அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.

பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்தும் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு கோலங்கள் வரைந்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராப்பூ நடராஜமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.