அரியலூரில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை இருசக்கர வாகன விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரியலூா் ஆட்சியரக வளாகத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி, பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
பேரணியில் 100-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளா்கள் பங்கேற்று என் வாக்கு விற்பனைக்கு அல்ல உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், என் வாக்கு என் உரிமை உள்ளிட்ட தோ்தல் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய தொப்பிகளை அணிந்தும் நகரின் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனா். மேலும், தோ்தல் விழிப்புணா்வு கோலங்கள் வரைந்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில் தோ்தல் விழிப்புணா்வு அலுவலா் யோகஜோதி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் அனுராப்பூ நடராஜமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

100 சதவீத வாக்களிப்பு விழிப்புணா்வுப் பேரணி

குமாரபாளையத்தில் இருசக்கர வாகன தோ்தல் விழிப்புணா்வுப் பேரணி

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

