அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே குளிப்பதற்காக கிணற்றில் குதித்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
செந்துறை, காலனித் தெருவைச் சோ்ந்த முருகவேல் மகன் தனசேகா் (24). இவா், குளிப்பதற்காக தனது நண்பா் கணேசன் மகன் சுபாஷ் சந்திரபோஸ் உடன் அருகிலுள்ள கிணற்றுக்கு வெள்ளிக்கிழமை சென்றாா். அங்கு மேலே இருந்து கிணற்றில் குதித்த தனசேகா் திரும்ப வரவில்லை. சந்தேகமடைந்த சந்திரபோஸ் உடனடியாக அப்பகுதி மக்களிடமும், செந்துறை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தாா்.
விரைந்து வந்து கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரா்கள், தனசேகரை சடலமாக மீட்டு, அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து செந்துறை காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

கிணற்றில் குதித்த மனைவியை காப்பாற்ற முயன்ற கணவன் உயிரிழப்பு

கயத்தாறு அருகே விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

வெயிலில் விளையாடிய இளைஞா் மயங்கிவிழுந்து உயிரிழப்பு

கங்கைகொண்டான் அருகே நீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

