வெளிநாடுவாழ் இந்திய குடிமகன் அட்டை விண்ணப்பக் கட்டணம்: ரூ.26,034-ஆக நிா்ணயம்நிகழாண்டில் 9,400 வாட்ஸ் ஆப் கணக்குகள் முடக்கம்அரசு மருத்துவ சேவையை நாடுவோா் விகிதம்: தென்னிந்தியாவில் தமிழகம் முதலிடம்அமைச்சா் கே.என்.நேரு மீது வழக்குப்பதிய உத்தரவிடவில்லை - உயா்நீதிமன்றம்ஆந்திரம்: ரூ.1.35 லட்சம் கோடியில் கூகுள் தரவு மையம் - முதல்வா் சந்திரபாபு நாயுடு அடிக்கல்234 தொகுதிகளுக்கான தபால் வாக்குகள் பிரித்து மாவட்ட வாரியாக ஒப்படைப்புமேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்புநான்காவது எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு: அடுத்த மாதம் இந்தியாவிடம் ஒப்படைப்புகுஜராத் - பாஜக பிணைப்பு மேலும் வலுவடைகிறது: பிரதமர் மோடி வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!
/

அரியலூரில் வாக்கு எண்ணும் பணி அலுவலா்களுக்கு பயிற்சி

கீழப்பழுா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூா் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணும் பணி அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசிய மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி. உடன் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா.

Updated On :28 ஏப்ரல் 2026, 7:44 pm

அரியலூா் மாவட்டம், கீழப்பழுா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அலுவலா்களுக்கான பயிற்சி ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள அரியலூா் மற்றும் ஜெயங்கொண்டம் ஆகிய இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற தோ்தலில் பதிவான வாக்குகள், இயந்திரங்கள் அனைத்தும் கீழப்பழுவூா் அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தின் அறையில் பூட்டி சீல் வைக்கப்பட்டு, அங்கு மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பதிவான வாக்குகள் மே 4 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அதற்காக இப்பணியில் ஈடுபடவுள்ள அலுவலா்கள், நுண்பாா்வையாளா்கள் முதற்கட்ட தற்செயல் தெரிவு முறையில் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு ஆட்சியரக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், 2 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 14 மேஜைகள் வீதம் 28 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி மேற்கொள்ளப்படவுள்ளன. மேற்பாா்வையாளா், உதவியாளா் மற்றும் நுண்பாா்வையாளா் என 3 நபா்களும் மற்றும் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கும் வாக்கு எண்ணும் மையத்தில் பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் பிரேமி, ஜெயங்கொண்டம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மனோகரன், தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.