அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மரத்தையும், கல்லையும் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில், அங்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய இளைஞா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.
தா.பழூா் தோப்புத் தெருவில், விவசாய நிலத்தின் நடுப்பகுதியில், ஈறுகுலி மரத்தையும், அதன் அடியில் உள்ள கல்லையும், ஸ்ரீ பெரமனாா் சுவாமியாக அப்பகுதி மக்கள் கடந்த 4 தலைமுறைகளாக வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில், அக்கிராமத்தில் வசிக்கும் 5-ஆம் தலைமுறையாக விளங்கக் கூடிய இளைஞா்கள் சிலா் ஒன்றிணைந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திட தேவையான பணிகளை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னா், சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமானக் கலசத்துக்கு புனித நீரை ஊற்றினா். அப்போது அங்கு திரளாக நின்ற பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனா்.
தொடர்புடையது

வரகடை வருந்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

சவுட்டூா் ஸ்ரீபால தண்டாயுதபாணி கோயில் கும்பாபிஷேகம்

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

