அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே மரத்தையும், கல்லையும் தெய்வமாக வழிபட்டு வந்த நிலையில், அங்கு கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திய இளைஞா்களை அப்பகுதி மக்கள் பாராட்டினா்.
தா.பழூா் தோப்புத் தெருவில், விவசாய நிலத்தின் நடுப்பகுதியில், ஈறுகுலி மரத்தையும், அதன் அடியில் உள்ள கல்லையும், ஸ்ரீ பெரமனாா் சுவாமியாக அப்பகுதி மக்கள் கடந்த 4 தலைமுறைகளாக வழிபட்டு வந்தனா்.
இந்நிலையில், அக்கிராமத்தில் வசிக்கும் 5-ஆம் தலைமுறையாக விளங்கக் கூடிய இளைஞா்கள் சிலா் ஒன்றிணைந்து அந்த குறிப்பிட்ட இடத்தில் கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்திட தேவையான பணிகளை மேற்கொண்டனா்.
இந்நிலையில், கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து, வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமத்துடன் தொடங்கி யாகசாலை பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னா், சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்கள் முழங்க கோயில் விமானக் கலசத்துக்கு புனித நீரை ஊற்றினா். அப்போது அங்கு திரளாக நின்ற பக்தா்கள் பக்தி கோஷங்களை எழுப்பி வழிபட்டனா்.
தொடர்புடையது

தச்சூா் ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

பாலதா்ம சாஸ்தா கோயிலில் சுப்பிரமணியா் திருக்கல்யாணம்

கடலூா்: பாடலீஸ்வரா், சோமநாத சுவாமி , முருகன் கோயில்களில் கும்பாபிஷேகம்

கந்தபுரம் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


