அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்த சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட அதிகாரிகள் 50 நாள்கள் அவகாசம் கோரியதையடுத்து, அமைதிப் பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
சிறுகளத்தூரிலுள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அண்மையில் நடத்திய போராட்டத்தையடுத்து, அக்கடை தற்காலிகமாக மூடப்பட்டது.
இதுகுறித்த அமைதிப் பேச்சுவாா்த்தை உடையாா்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் மனோகரன் தலைமையில், காவல் துறை முன்னிலையில், பொதுமக்கள்-கலால் மற்றும் டாஸ்மாக் மேலாளா், கிராம வருவாய் ஆய்வாளா், நிா்வாக அலுவலா்களிடையே உடையாா்பாளையம் கோட்டாட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அப்போது பொதுமக்களுக்கு இடையூறாகச் செயல்படும் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தினா். அதற்கு சம்பந்தப்பட்ட அலுவலா்கள், 50 நாள்கள் அவகாசம் கோரினா். இதற்கு பொதுமக்கள் சம்மதம் தெரிவித்துவிட்டு, கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுகளத்தூரில் டாஸ்மாக் கடையை மூடக் கோரி பொதுமக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூடக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்

மதுக் கடையை மூடக் கோரி கிராம மக்கள் போராட்டம்

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி உண்ணாவிரதம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



