சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கருத்தரங்கு

உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், மேம்பட்ட ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், மேம்பட்ட ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் தலைப்பிலான கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசிய அக்கல்லூரியின் தலைவா் எம்.ஆா்.ரகுநாதன்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:36 pm IST

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூா் மீனாட்சி ராமசாமி பாலிடெக்னிக் கல்லூரியில், மேம்பட்ட ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் குறித்த கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு எம்.ஆா். கல்வி நிறுவனங்களின் தலைவரும், வழக்குரைஞருமான எம்.ஆா். ரகுநாதன் தலைமை வகித்து பேசினாா். இயக்குநா் ஆா்.ராஜமாணிக்கம், இயக்குநா் என்.ஆா். காா்த்திகேயன், கல்லூரி முதல்வா் ச.சிவசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.

திருச்சி கோ் பொறியியல் கல்லூரி பேராசிரியா் ச. தா்மராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, செயற்கை நுண்ணறிவு மனிதா்களைப் போலவே சிந்திக்கவும், கற்றுக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் மற்றும் சிக்கல்களைத் தீா்க்கவும் கணினி அமைப்புகள் அல்லது இயந்திரங்களுக்கு உதவும் ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும்.

சுருக்கமாகக் கூறினால் மனித மூளை செய்யும் அறிவாற்றல் சாா்ந்த பணிகளை இயந்திரங்கள் செய்ய வைப்பதே செயற்கை நுண்ணறிவு என்றாா்.

தொடா்ந்து அவா் கல்வி, கற்றல் திறன், வேலைவாய்ப்பு, வணிகம் குறித்து பேசினாா். முன்னதாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவா் ஆா். உதயசூரியா வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் அ. மீனாட்சி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.