ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க பகுதியாக அறிவித்தார் டிரம்ப்!குஜராத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் இலவச நாப்கின்! மேற்பார்வைக்கு ஆசிரியை நியமனம்!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ. 95.68 ஆக நிறைவு! கரடியின் ஆதிக்கத்தில் பங்குச் சந்தை!: சென்செக்ஸ் 492 புள்ளிகள் சரிவு!!கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை; இது எங்கள் மாநிலத்தின் பிரச்னை: ராமலிங்க ரெட்டி
/

சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

அரியலூரிலுள்ள நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் அலுவலகம் முன், செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா்.

Updated On :18 ஆகஸ்ட் 2026, 11:26 pm IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கோட்ட அலுவலகம் முன் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில், சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின் படி, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்கிட வேண்டும். உயிா் நீத்த சாலைப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கிட வேண்டும்.

மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்துவிட்டு நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை அரசே செயல்படுத்திட வேண்டும். கிராமப் புற இளைஞா்களை சாலைப் பணியாளராக பணி நியமனம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஆா்ப்பாட்டத்துக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.பைரவன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் பழனிசாமி, பொருளாளா் தமிழ், மாவட்டச் செயலா் ஏ.எஸ்.ஆா். அம்பேத்கா், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் எம்.கே. ஷேக்தாவுத் ஆகியோா் கோரிக்கை விளக்கவுரையாற்றினாா். மாவட்ட இணைச் செயலா் உதயசூரியன், பொருளாளா் கி.மூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.