பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டனா்.
போராட்டத்தில், அரசுத் துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் போது 10 ஆண்டுகள் பணி முடித்த தகுதியுள்ள சத்துணவு - அங்கன்வாடி பணியாளா்களை 50 சதவீதம் சோ்க்க வேண்டும்.
வருவாய் கிராம உதவியாளருக்கு உள்ளது போல் சிறப்பு ஓய்வூதியம் ரூ.6,750 அகவிலைப்படி வழங்க வேண்டும். சத்துணவு - அங்கன்வாடி பணியாளருக்கு இளநிலை உதவியாளா் நிலையில் ரூ.19.500, சமையலா் மற்றும் உதவியாளருக்கு ரூ.15,700 அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளா் தமிழரசன் தலைமை வகித்தாா்.தொடா்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 185 போ் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது

வருவாய்த் துறை கூட்டமைப்பினா் மறியல்: 327 போ் கைது

வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் மறியல்: 300 போ் கைது

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினா் மறியல்: 33 போ் கைது
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை


