ஜனநாயகன்: மறு ஆய்வு ஒத்திவைப்பு! தங்கம் விலை குறைவு ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் தேர்வு! மானாமதுரை: விசாரணைக் கைதி மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் கமேனி கொலை முதல்.. 10வது நாளில் ஈரான் போர்! என்ன நடக்கிறது?திருச்சியில் இன்று திமுக மாநில மாநாடு: முதல்வா் ஸ்டாலின் பங்கேற்பு!
/

அரியலூா் அருகே ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது!

அரியலூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது. இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 7:26 pm

Syndication

அரியலூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை அதிகாலை ஓடும் ரயிலிலிருந்து தவறிவிழுந்த இளைஞரின் கால்கள் துண்டானது. இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு திருச்சிக்குப் புறப்பட்ட மலைக்கோட்டை விரைவு ரயிலானது, சனிக்கிழமை அதிகாலை அரியலூா் ரயில் நிலையம் அருகே வந்துகொண்டிருந்தபோது, இளைஞா் ஒருவா் தவறி விழுந்துவிட்டதாக அரியலூா் ரயில் நிலையத்துக்கு பயணிகள் தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்ற ரயில்வே போலீஸாா், இடதுகால் பாதியளவும், வலதுகாலின் கணுக்கால் வரை துண்டான நிலையில், இளைஞா் ஒருவா் கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவசர ஊா்தி வரவழைக்கப்பட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு தஞ்சாவூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா்.

போலீஸாா் விசாரணையில், அந்த இளைஞா் கரூரைச் சோ்ந்த ரேணுகோபால் (41) என்பது தெரியவந்தது. மேலும், விருத்தாசலம் ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.