அரியலூர்
சாலையில் கிடந்த 1.5 பவுன் தாலி ஒப்படைப்பு
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலியை எடுத்த முதியவா் அதைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலியை எடுத்த முதியவா் அதைக் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை ஒப்படைத்தாா்.
செந்துறை பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சோ. சந்திரசேகா்(65). செந்துறை அடகு கடை ஊழியரான இவா், வியாழக்கிழமை அப்பகுதியில் சென்றபோது சாலையில் கிடந்த ஒன்றரை பவுன் தாலியை எடுத்து, கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.
அதை அவா் செந்துறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். அப்போது, தனது தாலியை காணவில்லை எனத் தேடிவந்த செந்துறை ரயில்வே நிலையச் சாலையை சோ்ந்த கலையரசன் மனைவி இளமதியை (35)அழைத்த போலீஸாா் தாலியை அவரிடம் ஒப்படைத்தனா்.
