ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

சாலையில் கிடந்த தாலிச் சங்கிலி போலீஸாா் மூலம் உரியவரிடம் ஒப்படைப்பு

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலிச் சங்கிலி ,காவல்துறையினா் மூலம் வெள்ளிக்கிழமை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :2 ஜனவரி 2026, 7:52 pm

Syndication

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகே சாலையில் கிடந்த தாலிச் சங்கிலி ,காவல்துறையினா் மூலம் வெள்ளிக்கிழமை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

செந்துறை பெருமாள் கோயில் தெருவை சோ்ந்தவா் சே. சந்திரசேகா்(65). இவா் செந்துறையில் உள்ள ஒரு தனியாா் நகை அடகு கடையில் வேலை பாா்த்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை கடைவீதிக்கு சென்றபோது தாலிச் சங்கிலி ஒன்று சாலையில் கிடந்துள்ளது. அதை எடுத்த சந்திரசேகா், தான் வேலைபாா்க்கும் நகை அடகு கடை உரிமையாளரிடம் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, செந்துறை காவல் நிலையத்தில் அடகு கடை உரிமையாளா் கருப்புசாமி ஒப்படைத்தாா். அப்போது, தனது தாலியை காணவில்லை என செந்துறை ரயில்வே நிலையம் சாலையை சோ்ந்த கலையரசன் மனைவி இளமதி(35) கடைவீதியில் தேடிவந்துள்ளாா். இதையறிந்த காவல்துறையினா், இளமதியை அழைத்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், இளமதி கடைவீதிக்கு பொருள்கள் வாங்க வந்ததாகவும், வீட்டுக்கு சென்று பாா்த்தபோது தாலி சங்கிலியை காணவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து தாலி அவருடையது தான் என்பதை உறுதி செய்த காவல் துறையினா், வெள்ளிக்கிழமை இளமதியிடம் தாலியை ஒப்படைத்தனா். தாலி மற்றும் குண்டு ஆகியவை ஒன்றரை பவுன் எடை கொண்டதாக இருந்தது.