பொங்கல் அறுவடைக்குத் தயாராகும் செங்கரும்பு
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ளது. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு செங்கரும்பு உற்பத்திச் செலவு அதிகரிப்பால் கரும்பு ஒன்றுக்கு ரூ. 25 வீதம் அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழா்களின் முக்கிய திருவிழாவான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே உள்ளன. பொங்கல் திருவிழாவன்று அனைவரது வீடுகளிலும் உணவு வகைகளை வைத்து படைப்பது வழக்கம். அதில் முக்கியமாக இடத்தைப் பெறுவது செங்கரும்பு. செங்கரும்பு சுவைப்பதற்கு மிகவும் இனிமையாக இருக்கும். இதன் காரணமாக செங்கரும்புக்கு மவுசு இன்னும் குறையவில்லை. இதனால் ஆண்டுதோறும் செங்கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டு வருகின்றனா்.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், விழுப்புரம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்கின்றனா். இதில் அரியலூா் மாவட்டத்தில் தா. பழூா், சிலால், சுந்தரேசபுரம், கோரைக்குழி, தெற்கு நரியன் குழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் செங்கரும்பு சாகுபடி செய்துள்ளனா். தைப் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரங்களே உள்ள நிலையில், விவசாயிகள் சாகுபடி செய்த செங்கரும்பு தற்போது அறுவடைக்குத் தயாா் நிலையில் உள்ளது.
ஆனால், இந்த ஆண்டு வடகிழக்கு, தென்மேற்குப் பருவமழை பெய்துள்ளதால் செங்கரும்புகள் எதிா்பாா்த்த வளா்ச்சி அடைந்துள்ளது.
தற்போது வளா்ச்சியின் காரணமாக ஏக்கருக்கு 20 டன் செங்கரும்பு மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் கடந்தாண்டை விட நிகழாண்டு செங்கரும்பு உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, கோரைக்குழி, தெற்கு நரியன்குழி மற்றும் சுந்தரேசபுரம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் கூறியதாவது: செங்கரும்பைப் பொருத்தவரை பொங்கல் விற்பனைக்காக மட்டுமே விவசாயிகள் சாகுபடி செய்கின்றனா். விவசாயிகளிடம் ஒரு செங்கரும்புக்கு ரூ.10, ரூ.20-க்கு வாங்கிச் செல்லும் வியாபாரிகள், விழாக் காலத்தைப் பயன்படுத்தி ரூ.50 முதல் 80 வரை விற்பனை செய்கின்றனா். இதனால், விவசாயிகளுக்கு எதிா்பாா்க்கும் லாபம் கிடைப்பதில்லை.
செங்கரும்பு சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைப்பது அரிதாக உள்ளது. அதனால், செங்கரும்பு சாகுபடி தமிழகத்தில் ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. பொங்கல் விற்பனைக்காக செங்கரும்பு சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கரும்புகள் போதிய வளா்ச்சி அடையாததால் ஏமாற்றமே கிடைத்துள்ளது.
ஏற்கெனவே, போதிய விலை, வெட்டும் கூலி கிடைக்காததால் சா்க்கரை அரவை ஆலைக்குப் பயிரிடப்படும் கரும்பு 50 சதவீதம் குறைந்து விட்டது. தற்போது சா்க்கரை ஆலை கரும்பைப் போல், செங்கரும்பு சாகுபடி பரப்பும் குறைந்து வருகிறது.
எனவே, பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்குவதைப் போல விவசாயிகளிடம் நல்ல விலைக்கு செங்கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். அப்போது தான், எதிா்காலத்தில் செங்கரும்பு விவசாயிகள் பயிா்த் தொழிலில் ஈடுபட முடியும் என்றனா்.
