வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு தவெக சாா்பில் மாலை அணிவிப்பு!

News image
Updated On :11 ஜனவரி 2026, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தவெகவில் அண்மையில் இணைந்த கவிதா ராஜேந்திரன், சந்திரசேகா் உள்ளிட்ட கட்சியினா் ஊா்வலமாகச் சென்று அரியலூா் பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா, பெரியாா் சிலைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அரியலூா் அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் கவிதா ராஜேந்திரன், அதிமுகவை சோ்ந்தவரும் முன்னாள் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவருமான பொ. சந்திரசேகா் ஆகியோா் அண்மையில் சென்னையில் தவெக தலைவா் விஜயை சந்தித்து, தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனா். இந்நிலையில் அரியலூா் கோட்டாட்சியரகம் முன்பிருந்து தவெக மாவட்டச் செயலா் சிவா தலைமையில் ஊா்வலமாகச் சென்று அவா்கள் மாலை அணிவித்தனா்.