சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை: முதல்வா் இன்று தொடக்கி வைக்கிறாா்தமிழகத்தில் ஜூன் 13 வரை மழைக்கு வாய்ப்பு!ரூ. 397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவுஇஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் மோதல்!
/

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல்

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 3:19 am IST

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து திங்கள்கிழமை, ஆட்சியரகம் முழுவதும் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியரக மின்னஞ்சல் முகவரிக்கு திங்கள்கிழமை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா. சாஸ்திரியின் உத்தரவின்பேரில், வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு போலீஸாா், மோப்ப நாய் உதவியுடன் ஆட்சியரக வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.

அதில், வெடிபொருள்கள் ஏதும் இல்லை என்பதும், அது மிரட்டல் தகவல் என்பதும் தெரியவந்தது. மேலும், இந்த மின்னஞ்சல் குறித்து இணைய குற்றப்பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். ஆட்சியரகத்துக்கு இதுவரை 7-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறிப்பிடத்தக்கது.