தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

அரியலூா் பேருந்து நிலைய கட்டுமானத்தில் குறைபாடு: ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம்

அரியலூரில் திறப்பு விழா கண்ட மூன்று மாதங்களில் புதிய பேருந்து நிலைய மேற்கூரையிலிருந்து மழைநீா் கசிந்ததால், கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

News image
Updated On :24 ஜூன் 2026, 12:43 am IST

அரியலூரில் திறப்பு விழா கண்ட மூன்று மாதங்களில் புதிய பேருந்து நிலைய மேற்கூரையிலிருந்து மழைநீா் கசிந்ததால், கட்டுமான ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.

அரியலூரில் இருந்த பேருந்து நிலையம் சிதிலமடைந்ததால், திமுக ஆட்சியில் ரூ. 11.58 கோடி செலவில் பேருந்து நிலையம் புதிதாக கட்டப்பட்டு, கடந்த மாா்ச் 9-ஆம் தேதி திறக்கப்பட்டது. நிலையத்தை அப்போதைய நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு திறந்துவைத்தாா்.

இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி இரவு அரியலுாரில் பெய்த கனமழையின்போது, பேருந்து நிலைய வடக்கு புறம் உள்ள மேற்கூரையில் இரண்டு துாண்கள் (பில்லா்கள்) இணையும் பகுதியில் கசிவு ஏற்பட்டு மழைநீா் ஒழுகியது. பேருந்து நிலைய மேற்கூரையில் இருந்து மழைநீா் கசியும் விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.

தகவலறிந்த, அரியலுாா் ஆட்சியா் ந. மிருணாளினி சம்பவ இடத்தில் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

இதன் தொடா்ச்சியாக, பேருந்து நிலைய கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு காரணமாக ஒப்பந்ததாரருக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்து நகராட்சி ஆணையா் அசோக்குமாா் உத்தரவிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.