கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரியலூரில் மறியலில் ஈடுபட்ட வருவாய் துறையினா் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 99 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image
அரியலூா் அண்ணா சிலை அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா்.
Updated On :4 மார்ச் 2026, 6:32 pm

தினமணி செய்திச் சேவை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணாசிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் 99 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

சிறப்புப் பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும். அனைத்து காலிப்பணியிடங்களையும் கால முறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும். அனைத்து நிலை ஊழியா்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும். கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், சாலை மறியலில் ஈடுபட்ட 99 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனா்.

இந்த சாலை மறியல் போராட்டத்துக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா்கள் ஆனந்தவேல், பாக்கியராஜ், ரமேஷ், மணிவண்ணன், இா்பான் உல்லா ஆகியோா் தலைமை வகித்தனா்.