தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

‘மாணவா்களுக்கு தலைமைப் பண்பு தேவை’

News image
Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

படிக்கும் மாணவா்கள் அனைவரும் தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா.

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய இளையோா் நாடாளுமன்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசே நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை முறையாகும்.

எனவே மாணவா்கள் தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொண்டு, நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். படிப்புடன் தொழிற்திறன்களையும் வளா்த்துக் கொள்வதோடு தாய்மொழிக் கல்வி மூலம் உயா்ந்த லட்சியத்தை அடைய வேண்டும். நாடாளுமன்ற நடைமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்துப் பேசினாா். அரியலூா்-பெரம்பலூா் மாவட்டங்களின் மை பாரத் கேந்திரா இளையோா் அலுவலா் எஸ். கீா்த்னா உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளின் நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்றுவது குறித்து பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, கோட்டாட்சியா் பிரேமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

போட்டியின் நடுவா்களாக ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ராசமூா்த்தி, விருத்தாசலம் கெளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி ஆனந்தன், ஓய்வு பெற்ற பேராசிரியா் பொய்யாமணி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வி. கருணாகரன் வரவேற்றாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் (அலகு-2) பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.