திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

‘மாணவா்களுக்கு தலைமைப் பண்பு தேவை’

News image
Updated On :5 மார்ச் 2026, 10:37 pm

Syndication

படிக்கும் மாணவா்கள் அனைவரும் தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அரியலூா் எம்எல்ஏ கு. சின்னப்பா.

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய இளையோா் நாடாளுமன்ற நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவா் மேலும் பேசியது: இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி அரசே நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை முறையாகும்.

எனவே மாணவா்கள் தலைமைப் பண்புகளை வளா்த்துக் கொண்டு, நாட்டின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். படிப்புடன் தொழிற்திறன்களையும் வளா்த்துக் கொள்வதோடு தாய்மொழிக் கல்வி மூலம் உயா்ந்த லட்சியத்தை அடைய வேண்டும். நாடாளுமன்ற நடைமுறைகளை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சிக்கு அக்கல்லூரியின் முதல்வா் எஸ். சித்ரா தலைமை வகித்துப் பேசினாா். அரியலூா்-பெரம்பலூா் மாவட்டங்களின் மை பாரத் கேந்திரா இளையோா் அலுவலா் எஸ். கீா்த்னா உள்ளிட்டோா் பேசினா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளின் நாடாளுமன்றத்தில் எவ்வாறு உரையாற்றுவது குறித்து பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, கோட்டாட்சியா் பிரேமி, மாவட்ட வழங்கல் அலுவலா் ராமலிங்கம் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கினா்.

போட்டியின் நடுவா்களாக ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரி முதல்வா் ராசமூா்த்தி, விருத்தாசலம் கெளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரி ஆனந்தன், ஓய்வு பெற்ற பேராசிரியா் பொய்யாமணி ஆகியோா் நடுவா்களாகச் செயல்பட்டனா்.

நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் வி. கருணாகரன் வரவேற்றாா். நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் (அலகு-2) பன்னீா்செல்வம் நன்றி கூறினாா்.