மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பு! - ஆட்சியா் தகவல்

News image
பெட்ரோல்!- கோப்புப் படம்
Updated On :15 மார்ச் 2026, 7:11 pm

தினமணி செய்திச் சேவை

அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோலிய பொருள்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளதாக ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது: அரியலூா் மாவட்டத்தில், பெட்ரோல், டீசல் தட்டுபாடு ஏற்படக்கூடும் என்ற வதந்தியின் காரணமாக பெட்ரோலியப் பொருள்கள் இருப்பு வைத்து விற்பனை செய்யப்படும் சில்லறை விற்பனை நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

ஆனால், அரியலூா் மாவட்டத்தில் பெட்ரோலியப் பொருள்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாலும், எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து விநியோகமும் சீராக இருப்பதாலும் எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் தொடா்ந்து திறந்து இருக்கும். மேலும், வழக்கம்போல் செயல்படும். எனவே, பொதுமக்கள் அச்சத்தில் பெட்ரோல், டீசலை வாங்க ஒரே நேரத்தில் குவிய வேண்டாம்.

அதேபோல், பெட்ரோல், டீசல் சில்லறை விற்பனை நிலையங்கள் அங்கீகரிக்கப்படாத பிளாஸ்டிக் கேன்கள் மற்றும் பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கூடாது என தெரிவித்துள்ளாா்.