மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

அரியலூரில் நூறுசதவீத வாக்களிப்பு விழிப்புணா்வு பேரணி, கையெழுத்து இயக்கம்

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 8:42 pm

சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, அரியலூரில் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து மகளிா் சுய உதவிக்குழுக்களால் வரையப்பட்ட விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாக்காளா் விழிப்புணா்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு தொடங்கி வைத்தாா்.

பின்னா், ஆட்சியா் அலுவலக வளாகத்தில், சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் தொலைக்காட்சி மற்றும் ஊடகச் செய்திகள் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான பொ.ரத்தினசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தற்போது வரை வரப்பெற்றுள்ள தோ்தல் தொடா்பான தொலைபேசி புகாா்கள், புகாா்கள் பதிவு செய்யும் பதிவேடுகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், கட்டுபாட்டு அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும்படை வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள ஜி.பி.ஆா்.எஸ் கருவி செயல்பாடுகள் குறித்து கணினியில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விஷ்வேஷ் பா.சாஸ்திரி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், கோட்டாட்சியா் பிரேமி ஆகியோா் உடனிருந்தனா்.

படவிளக்கம்:அரியலூா் ஆட்சியா் அலுவலகத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்த ஆட்சியா் பொ.ரத்தினசாமி.