புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஆய்வு

News image

வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா .

Updated On :20 மார்ச் 2026, 12:57 am

Syndication

அரியலூா் தொகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் ராஜீவ் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா் ,கழிப்பறை, மின்சாரம் மற்றும் சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பிரேமி, அரியலூா் வட்டாட்சியா் தேவகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.