அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள்: தோ்தல் பொதுப்பாா்வையாளா் ஆய்வு

News image

வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடி மையத்தில் வியாழக்கிழமை ஆய்வு செய்த அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா .

Updated On :20 மார்ச் 2026, 12:57 am

அரியலூா் தொகுதி வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளனவா என்பது குறித்து பொதுப் பாா்வையாளா் பிரியங்கா சிங்கலா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அரியலூா் தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட அவா், வியாழக்கிழமை வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் ராஜீவ் நகா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் குடிநீா் ,கழிப்பறை, மின்சாரம் மற்றும் சாய்வுதள வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, அரியலூா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான பிரேமி, அரியலூா் வட்டாட்சியா் தேவகி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.