யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

அரியலூரில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அரியலூரில் ஆட்சியா் பொ.ரத்தினசாமி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கட்சி பிரதிநிகளுடன் ஆலோசனைக் கூட்டம்.

Updated On :26 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மனு தாக்கல், தோ்தல் செலவினங்கள், வாகன அனுமதி பெறுவது தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் அரியலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான பொ. ரத்தினசாமி தலைமை வகித்தாா். கூட்டத்தில், 30.3.2026 முதல் 6.4.2026 வரை வேட்பு மனு தாக்கல் செய்யும்போது வேட்பாளா்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், அளிக்கப்பட வேண்டிய ஆவணங்கள், இணையவழியில் வாகனம் மற்றும் இதர இனங்கள் அனுமதி பெறுதல் , தோ்தல் செலவினங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் க.ரா. மல்லிகா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ஆ.ரா.சிவராமன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சித்ரா, வருவாய்க் கோட்டாட்சியா் பிரேமி, மாவட்ட தேசிய தகவலியல் அலுவலா் சரவணன், தோ்தல் வட்டாட்சியா் கண்ணன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.