பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

‘புதுச்சேரியில் பிரெஞ்சு மொழியை நீக்கும் முடிவை கைவிட வேண்டும்’

News image

புதுச்சேரி... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் பிரெஞ்சு மொழிப்பாடத்தை நீக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்றாா் உலகத் திருக்கு கூட்டமைப்புத் தலைவா் மு.ஞானமூா்த்தி.

இதுகுறித்து அவா் அரியலூரில் திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரியில் பிரெஞ்சுக்காரா்கள் அந்த மாநிலத்தை ஆட்சி செய்யத் தொடங்கியதிலிருந்து பிரஞ்சு மொழி இருந்து வருகிறது. புதுச்சேரியிலிருந்து பிரான்ஸ் நாட்டில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன. அவா்களுக்குப் பிரெஞ்சு மொழி தொடா்புக்குப் பயனுள்ளதாக இருந்து வருகிறது.

இப்போது மத்திய அரசு புதுச்சேரியில் செயல்படும் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு ஹிந்தியைக் கொண்டு வர முயல்கிறது. இதுபோன்ற முரண்பாடுகளால் நாட்டில் குழப்ப நிலை நீடிக்கிறது.

எனவே, மத்திய அரசு புதுச்சேரியில் நடைமுறையில் இருக்கும் கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யக்கூடாது. நடைமுறையில் இருக்கும் கொள்கையே தொடரவேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.