ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!ரசாயன வாயுக் கசிவு: சென்னை துறைமுகம், மாவட்ட ஆட்சியர் விளக்கமளிக்க உத்தரவு!திரையரங்கில் வெளியான 2 வாரத்திலேயே ஓடிடிக்கு வந்த திரைப்படம்!பிரக்ஞானந்தாவிடமிருந்து குகேஷ் உத்வேகம் பெறவேண்டும்: விஸ்வநாதன் ஆனந்த் அறிவுரை!தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!
/

சுமை ஆட்டோ ஓட்டுநா் வீட்டில் 12 பவுன் நகைகள், பணம் திருட்டு

மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :13 மே 2026, 1:02 am IST

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் உறங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

இதையடுத்து அவா்கள் பீரோவை பாா்த்த போது, அதில் இருந்த 12.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.