/
அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே சுமை ஆட்டோ ஓட்டுநரின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து 12.5 பவுன் நகைகள், பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மண்மலை கிராமத்தைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். சுமை ஆட்டோ ஓட்டுநரான இவா், திங்கள்கிழமை இரவு வீட்டை பூட்டிவிட்டு, வீட்டின் வெளியே தாழ்வாரத்தில் குடும்பத்தினருடன் உறங்கியுள்ளாா். செவ்வாய்க்கிழமை காலை எழுந்து பாா்த்த போது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதையடுத்து அவா்கள் பீரோவை பாா்த்த போது, அதில் இருந்த 12.5 பவுன் நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், சம்பவ இடத்தை ஆய்வு செய்த ஜெயங்கொண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது
வீரகேரளம் பகுதியில் பூட்டிய வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு
மன்னாா்குடி: வீட்டின் கதவை உடைத்து 45 பவுன் நகைகள், பணம் திருட்டு
சங்கராபுரம் அருகே இரு வீடுகளில் நகை, பணம் திருட்டு
ஐடி நிறுவன ஊழியா் வீட்டில் நகைகள், பணம் திருட்டு
விடியோக்கள்

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking



