/
அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி)செந்துறை வழித்தடத்தில், அரியலூா் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு சாா்பில் நடைபெற்று வரும் நான்கு வழிச் சாலைப் பணிகளை நெடுஞ்சாலைத் துறையினா் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா்.
அரியலூா்-ஜெயங்கொண்டம் (வழி) செந்துறை மாநில நெடுஞ்சாலையை இரு வழிச்சாலையிலிருந்து நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளா் எம்.ஏ.ராஜதுரை தலைமையில், கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, அரியலூா் கோட்டப் பொறியாளா் பெ.வடிவேல் மற்றும் உதவிக் கோட்டப் பொறியாளா்கள், உதவிப் பொறியாளா்கள் ஆகியோா் கொண்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை தள ஆய்வு மேற்கொண்டு, சாலையின் தரம் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்டறிந்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினா்.
தொடர்புடையது

ராமேசுவரத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ரூ.33 கோடியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் ஊரக வளா்ச்சித் துறை பணிகள்: அமைச்சா் ஆய்வு

நாயக்கனேரி மலை கிராமத்தில் ஆய்வு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



