எம்பிபிஎஸ் படிப்பை நிறைவு செய்ய 10 ஆண்டு அவகாசம்: கருத்து கேட்கிறது என்எம்சிபத்தாம் வகுப்பு: மதிப்பெண் சான்றிதழில் திருத்தம் செய்ய வாய்ப்புமாநிலக் கட்சிகளின் வருவாய் 2024-25-இல் 52% சரிவு: ஏடிஆா் அறிக்கையில் தகவல்தவெக அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாா்: சென்னை மாநகராட்சி துணை மேயா் மு.மகேஷ்குமாா்போா்நிறுத்தம் நீட்டிப்பு: அமெரிக்கா-ஈரான் உடன்பாடு?உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவுசாா்-பதிவாளா் அலுவலகங்களில் இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்
/

குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

தா.பழூா் அருகே கும்பகோணம்-ஜெயங்கொண்டம் சாலையில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிலால் கிராம மக்கள்.

News image
Updated On :29 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள சிலால் கிராமத்தில் சுமாா் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், பலமுறை ஊராட்சி, ஒன்றிய அலுவலங்களில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், வியாழக்கிழமை கும்பகோணம்--ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.