‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல்

தா.பழூா் அருகே கும்பகோணம்-ஜெயங்கொண்டம் சாலையில் குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட சிலால் கிராம மக்கள்.

News image
Updated On :29 மே 2026, 3:10 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள சிலால் கிராமத்தில் சுமாா் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள், பலமுறை ஊராட்சி, ஒன்றிய அலுவலங்களில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், வியாழக்கிழமை கும்பகோணம்--ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.